பட்டாசு குடோனில் வெடி விபத்து- 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

 
s s

திருவோணம் அருகே அனுமதி இன்றி இயங்கிய  பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் இன்று  பயங்கர சத்தத்துடன் வெடித்தது சத்தம் கேட்டது. இதனை அடுத்து நெய்வேலி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது பட்டாசு வெடித்து இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த வாட்டாத்திகோட்டை போலீசார் மற்றும் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கரம்பக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்தியகீர்த்தி தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு வெடி விபத்தில் உடல் சிதறி பலியான நெய்வேலி தென்பாதி  பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு (வயது  60), அதே பகுதியைச் சேர்ந்த (ரியாஸ் 18), ஆகியோர் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு குடோன் விபத்து சம்பந்தமாக அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.