அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட வேகாத சாம்பார் சாதம்! கீழே வீசி சென்ற தொண்டர்கள்

 
food

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு, நன்றாக இல்லை என அதிருப்தி அடைந்த தொண்டர்கள், உணவை அங்கேயே வீசிச்சென்றனர்.

அதிமுக மாநாட்டில்  பங்கேற்க வரும் தொண்டர்களுக்காக மூன்று இடங்களில் உணவு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உணவு திடலிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவு அருந்தும் வகையில் பெரிய பெரிய பாத்திரங்களில் உணவு  சமைக்கப்பட்டது.  இன்று காலை சாம்பார் சாதம், கலவை சாதம் வழங்கிய நிலையில் பிற்பகலில் அதே சாம்பார் சாதமும்,  புளியோதரையும் வழங்கப்பட்டது. 

பிற்பகல் வழங்கப்பட்ட இரண்டு சாதங்களும் சரியாக வேகாததால் , அதனை வாங்கி சாப்பிட்ட தொண்டர்கள்,  சாப்பிட முடியாமல் கீழே போட்டு விட்டு சென்றனர். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான தட்டுகளில் வாங்கிய சாப்பாடு, அப்படியே கீழே வீசப்பட்டதால், ஏராளமான அளவில் சாப்பாடு வீணானது.  வந்திருந்த தொண்டர்கள்  ஒவ்வொரும் , நாங்கள் பல மைல் தூரம்  கடந்து மாநாட்டிற்கு வந்துள்ளோம். பசியோடு வந்த எங்களுக்கு உணவு சரியான முறையில் வழங்கவில்லை. வேகாத உணவு வழங்கியதால் அனைவரும் உணவினை கீழே வீசி விட்டு செல்கின்றனர் என பலரும் வேதனை தெரிவித்தனர்.