#BREAKING பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு - கனல் கண்ணன் கைது!!

 
tn

பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்தவரும், சினிமா சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

kanal-kannan-33

இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளர் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்மான கனல் கண்ணன் கடந்த ஒன்றாம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என்றார்.

கனல்  கண்ணனின் இந்த சர்ச்சை பேச்சை அடுத்து சென்னை பேப்பரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார்.  இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கனல்  கண்ணனை தேடினர். வடபழனி,  வளசரவாக்கம் வீடுகளில் அவர் இல்லாததால் கனல்  கண்ணன் தலைமுறைவாகியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

kanal kannan

இந்நிலையில் பெரியார் குறித்து  சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சினிமா சண்டைப் பயிற்சியாளர் மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்