விஜயகாந்த் உடலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நாம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் நிர்மலா சீதாராமன், பிரேமலதா அவரது மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், “விஜயகாந்த் இளகிய மனம் படைத்த தலைவர், விஜயகாந்த் வீட்டிற்கு சென்றவர் உணவருந்தாமல் திரும்ப முடியாது. பாகுபாடு பார்க்காத மனிதநேயமிக்க அரசியல்வாதி. ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டோம். இன்றைய தேதிக்கு இப்படிப்பட்ட அரசியல் தலைவர் நம்முடன் வாழ்ந்தாரா? என அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.