நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தீ விபத்து - பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!

 
fire

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 
 
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை வைப்பதற்காக தனி அறை ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று காலை இந்த அறையில் இருந்து திடீரென புகை வர தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

fire

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.  உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் 60க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிகாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.