சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு

 
fire

சென்னை திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை

சென்னை திருவான்மியூர் கலாஷேத்திரா சாலை 2வது தெருவில் அமைந்துள்ளது life style அடுக்குமாடி குடியிருப்பு. 7 வீடுகள் கொண்ட நான்கு மாடி குடியிருப்பில், கடைசி வீட்டில் மாலை 7.45 மணியளவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக   தீ பிடிக்க தொடங்கியுள்ளது, தீ பிடிக்க தொடங்கியுள்ளது அருகில் இருப்பவர்கள் இதனை கண்டு மற்ற தளங்களில் குடியிருப்பவர்களுக்கு தகவல் கொடுத்து வெளியேற்றியுள்ளனர். வீடு முழுவதும் பரவ தொடங்கிய தீயானது சமையல் அறையிலும் பரவிய நிலையில், அங்கிருந்த இரண்டு சிலிண்டர்கள் மீது தீ பரவி இரண்டு சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

fire

இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 24 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவந்து தீயை அணைத்தனர். அருகில் இருந்த வீடுகளுக்கு தீ பரவுவதை தடுத்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.