தொடர் கதையாக மாறியுள்ளது பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகள் - ஓபிஎஸ் வேதனை!!

 
ops

பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது என்று ஓபிஎஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த விரகாலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நாட்டு பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வந்துள்ள செய்தி என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்து  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 


பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.