இந்தியாவிலேயே முதன் முறை : இனி ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம்!

 
1 1

இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

 

இந்த ‘சென்னை ஒன்’ செயலி, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோ மற்றும் டாக்ஸி என அனைத்துப் போக்குவரத்து முறைகளையும் ஒரே ‘க்யூ.ஆர்.’ பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இனி, மக்கள் ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனியாக பயணச்சீட்டு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த செயலி மூலம், மக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும், யு.பி.ஐ. அல்லது கட்டண அட்டைகள் வழியாக எளிதாக பணம் செலுத்தி, ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்துப் போக்குவரத்து முறைகளிலும் பயணிக்கலாம். இதனால், பயணச்சீட்டு பெற வரிசையில் காத்திருக்க வேண்டிய சிரமம் இனி இருக்காது.இந்த செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.