முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..

 
விஜயபாஸ்கர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக  சி.விஜயபாஸ்கர் பதவி வகித்தார்.  இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக இவர் மீதும், இவரது மனைவி ரம்யா மீதும்  புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!

இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30-க்கு மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை, கடந்த மே மாதம் 22ம் தேதி  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்தது.  இந்நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் ஆகஸ்ட் 29ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.