அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கும் - ஜெயக்குமார் பேட்டி

 
jayakumar

மாநில உரிமையை பேணி காக்கும் தேர்தல் அறிக்கையாக அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், ஓ.எஸ்.மணியன், முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி, செம்மலை பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வைகைச்செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

jayakumar

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மாநில உரிமையை பேணி காக்கும் தேர்தல் அறிக்கையாக அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.  உரிய நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக தமிழகத்தில் இருக்கும். மண்டல வாரியாக மக்கள் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.  தமிழ்நாட்டை 7 மண்டலங்களாக பிரித்து அதிமுக மக்களிடம் கருத்து கேட்க உள்ளது என கூறினார்.