நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை - செல்லூர் ராஜூ பேட்டி

 
sellur raju and vijay

யார் யாரோ ஆட்சிக்கு வர போகிறோம் என சொல்லும்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவருக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் அதிகமாகவே உள்ளது. இது இவருடைய சமீபத்திய செயல்பாடுகள் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் அந்த விழாவில் அவர்களை அடுத்த தலைமுறை வாக்காளர்களே எனவும் அழைத்தார். இதனால் அவரது அரசியல் வருகை உறுதியானது. சமீபத்தில் லியோ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய் 2026 தொடர்பான கேள்விக்கு கப்பு முக்கியம் பிகிலு என பேசினார். இவரது இந்த பேச்சு அவர் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவார் என்பதை உறுதிப் படுத்தியது. 

இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், யார் யாரோ ஆட்சிக்கு வர போகிறோம் என சொல்லும்போது விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வைகையாற்றை தேம்ஸ் நதிக்கரை போல மாற்றி இருப்போம். 2026ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு கூறினார்.