முன்னாள் அமைச்சர் வடிவேல் மரணம் - சசிகலா இரங்கல்

 
sasikala

ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் வடிவேல் காலமானார். அவருக்கு வயது 86.  திருப்பூர் மாவட்டம் சம்பந்தி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல்  ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஊரக வளர்ச்சி மற்றும் தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால்,  அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.  வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி காணப்பட்டார்.

 இந்த சூழலில் நேற்று இரவு முன்னாள் அமைச்சர் வடிவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அவர் உயிரிழந்தார் . மறைந்த வடிவேலுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.  முன்னாள் அமைச்சர் வடிவேலுவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் வடிவேல்

இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைதள பக்கத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை அமைச்சரும், கழக முன்னாள் மாநில விவசாயப்பிரிவு செயலாளருமான வடிவேல் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.



அன்பு சகோதரர் வடிவேல் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.