கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல்

 
tn

செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் ரூ. 4, 276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

stalin

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பில் தினசரி 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரக் கருவிகள் நிறுவும் பணிகள்  நடைபெற்றன. அத்துடன் நுண் வடிகட்டிமற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் உந்து நிலையம், சுண்ணாம்பு செறிவூட்டும் நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

MK Stalin

இந்நிலையில் நெம்மேலியில்  கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தினசரி 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம், ரூ. 4, 276.44 கோடியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் அமைகிறது.