"ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்" - காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை!!

 
rg

உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளையொட்டி உத்தமர் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள்  துரைமுருகன்,  பொன்முடி , ஏ.வ.வேலு,சாமிநாதன்,ராஜ கண்ணப்பன், மா. சுப்ரமணியன்,சேகர்பாபு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டார் உடன் இருந்தனர்.

tn

இதுத்தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி! வெறுப்புணர்வுக்கு எதிராக ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்!



 

அவரது வாழ்வின் பொருளை உணர்த்தவே, இந்த நாட்டிற்கே 'காந்தி தேசம்' எனப் பெயரிட வேண்டும் எனத் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.

அண்ணல் என்றும் மகாத்மா என்றும் இந்த நாடும் பாரும் போற்றும் நமது தேசத் தந்தை காந்தியாரின் பிறந்தநாளில், அவர் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது இலட்சியப் பாதையில் வெறுப்புணர்வை ஒழித்து, #எல்லார்க்கும்_எல்லாம் என்ற இந்தியாவைக் கட்டமைப்போம்."என்று குறிப்பிட்டுள்ளார்.