கோவையில் பரபரப்பு! நீதிமன்ற வளாகத்தில் 2 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல் - ஒருவர் உயிரிழப்பு

 
covai issue

கோவையில், குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த 2 பேரை 4 பேர் கொண்ட அரிவாளால் வெட்டியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 2 பேர் குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வந்துள்ளனர். அவர்கள் வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு பின்னர் வெளியே வந்த போது திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த இருவரையும் சரமாரியாக வெட்டியது. மர்ம கும்பலின் சரமாரி தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரிவாளால் வெட்டப்பட்ட மற்றொருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த நபரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திலேயே இரண்டு பேரை நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.