பாஜக நிர்வாகி மீது காவல் ஆணையரிடம் புகாரளித்த காயத்ரி ரகுராம்..

 
 காயத்ரி ரகுராம்

தனது புகைப்படத்தை சித்தரித்து வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஆன்லைன் வழியாக நடிகை காயத்ரி ரகுராம் சைபர் க்ரைமில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து தொடர்ந்து  சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டும் வருகிறார். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,  என்று கூறி வருகிறார்.

 அண்ணாமலை

அதேநேரம் காயத்ரிக்கு எதிராக,  அண்ணாமலை ஆதரவாளர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைன் வழியாக காயத்ரி ரகுராம் நேற்று இரவு புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ‘ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு, எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.  

தனக்கு தொடர்ந்து ஆபாசமான பதிவுகள் வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினரை அணுக உள்ளதாகவும் காயத்ரி தெரிவித்திருக்கிறார்.  மேலும் நாளை நேரடியாக காவல்துறை அதிகாரிகளை சந்தித்து எழுத்து பூர்வமாக புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.