ஜெனட் மருத்துவமனை - உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை..!

 
1 1

திருச்சி புத்தூரில் உள்ள தனியார் (ஜெனட்) மருத்துவமனையில் கடந்த நவம்பா் மாதம் ஜெயராணி (30) என்பவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் போராட்டம் நடத்தினர். அந்த மருத்துவமனையில மகேப்பேறு மரணங்கள் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, உரிய விசாரணை நடத்த திருச்சி மாவட்ட ஆட்சியா் சரவணன் உத்தரவிட்டாா்.

சிறப்பு வருவாய்க் கோட்டாட்சியா் ராஜலட்சுமி தலைமையில திருச்சி அரசு மருத்துவமனை அறுவைசிகிச்சை பிரிவு தலைவா் எட்வினா வசந்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினா் விசாரணை நடத்தினா்.

விசாரணையின் முடிவில், மருத்துவமனையில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ மேலாண்மையின்றி இருப்பதாகவும், நோயின் தீவிரத் தன்மையை முன்கூட்டியே அறியாமல் இருந்ததால் மகப்பேறு இறப்புகள் அதிகமானது என தெரியவந்தது. இது குறித்து அந்த குழுவினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் சரவணன் அறிவுறுத்தலின்படி, அந்த மருத்துவமனையில் ஒரு மாத காலத்திற்கு உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதித்து சுகாதார துறை அதிகாரிகள உத்தரவிட்டுள்ளனர்.