விபி சிங்கின் நினைவு நாளில் அவரை போற்றுவோம் - ஜி.கே.மணி

 
gk mani

மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்கின் நினைவு நாளில் அவரை போற்றுவோம் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஜி.கே. மணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் அவரை போற்றுவோம் வணங்குவோம் மரியாதை செலுத்துவோம்.


முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் தனது பிரதமர் பதவி காலத்தில் குழு பரிந்துரையின்படி இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஓபிசி 27 % விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியின் நிலையை உயர்த்தி காட்டியவர் சமூக நீதியை காத்தவர் மரியாதைக்குரிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவரை இன்று நவம்பர்-27 போற்றுவோம் வணங்குவோம் மரியாதை செய்வோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.