இன்பம் பெருகவும், துன்பங்கள் நீங்கவும் புத்தொளி பிறக்கட்டும் - ஜி.கே.வாசன் வாழ்த்து!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு நாளை கொண்டாடப்படவுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தேசிய தலைவர்கள் முதல் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2024 ஆங்கிலப் #புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும்.
— G.K.Vasan (@GK__Vasan) December 31, 2023
அனைவரது வாழ்க்கையில் இன்பம் பெருகவும், துன்பங்கள் நீங்கவும் புத்தொளி பிறக்கட்டும்.#தமாகா சார்பில் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2024 #புத்தாண்டு_வாழ்த்துக்கள்#HappyNewYear2024 pic.twitter.com/7tfFn7NGCf
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில், 2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும். அனைவரது வாழ்க்கையில் இன்பம் பெருகவும், துன்பங்கள் நீங்கவும் புத்தொளி பிறக்கட்டும். தமாகா சார்பில் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.