இயக்குநர் அமீர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா

 
tn

இயக்குநர் அமீர் குறித்த பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

rg

பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டுகள் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக திரைபிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கணி, பொன்வன்னன் உள்ளிட்ட பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர். 

tn

இதுதொடர்பாக  தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே "அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!  என்று குறிப்பிட்டுள்ளார்.