தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு..
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 45,160 க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. அதன்படி மே மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.46 ஆயிரம் என்கிற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனையே இருந்து வந்த தங்கம் விலை, அண்மைக்காலமாக சற்று சரிவை சந்தித்து வந்தது. அதன்படி கடந்த மே 26ம் தேதி சவரன் 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையானது. அன்றைய தினம் ஒரு சவரன் 44 ஆயிரத்து 840 ரூபாயாகவும் , ஒரு கிராம் ரூ.5,605 ஆகவும் விற்கப்படுகிறது. அதன் பின்னர் மெல்ல மெல்ல விலை உயர்ந்து வருகிறது.
அந்தவகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.45,160க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.76.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது