மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது..

 
gold gold


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.75,240க்கு விற்பனையாகிறது

உலகளவில் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அதற்கேற்ப தங்கம் விலையும் அதிரடியாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.   சென்னையில் கடந்த ஆக 21  தங்க விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.73,840க்கும், கிராம் ரூ. 9,230க்கு விற்பனை செய்யப்பட்டது.  பின்னர் மீண்டும் ஆக.22 ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து  ஒரு சவரன்  ரூ.73,840க்கும்,  கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து  ஒரு கிராம் ரூ.9,215க்கு விற்பனையானது.  

gold

தொடர்ந்து ஆக. 23 அன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் மீண்டும் 74 ஆயிரத்தை தாண்டி ஒரு சவரன்  ரூ.74,520க்கும்,  ஒரு கிராம் ரூ.9,315க்கு விற்பனையானது. அன்றைய தினம் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.130 என்கிற புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் நேற்று முன்தினம்   மீண்டும் சவரனுக்கு ரூ.400ம், நேற்றைய தினம் மீண்டும் ரூ.280 உயர்ந்து   சவரன் 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் மேலும் சவரனுக்கு ரூ.120  ஒரு சவரன் ரூ.75,240 க்கும்  ஒரு கிராம் 9,405 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேநேரம் சில்லறை விற்பனையில்  வெள்ளி விலை மாற்றமின்றி  ஒரு கிராம்   ரூ. 130க்கு விற்பனை செய்யப்படுகிறது.