அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
gold gold

 சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 58,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. ஒருநாள் ஏறுவதும், ஒருநாள் இறங்குவதுமாக தங்கம் விலை உள்ளது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 57,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 225 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 58,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.