சவரனுக்கு ரூ. 160 அதிகரிப்பு.. மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்திருக்கிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 38 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையின் நிலவரத்துக்கு எற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும்.. அதன்படி திடீரென விலை அதிகரிப்பது, குறைவதுமான தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும். கடந்த 2 நாட்களாக தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டாலும், இந்த மாதத்தின் முதல் நாளான நேற்று விலை அதிரடியாக குறைந்து காணப்பட்டது. அதாவது கடந்த 29 ஆம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 38,200க்கும், அதேபோல் 30 ஆம் தேதி 38, 280 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் அதிரடியாக, யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 37,920 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை குறைந்ததை அடுத்து இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் இருந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வை கண்டிருக்கிறது. சென்னையில் 22 ஆபரணத் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,760 க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 67க்கு விற்கப்படுகிறது.