குட் நியூஸ்..! இனி தண்ணீர் பஞ்சம் இருக்காது... ரூ 150 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்..! ​​​​​​​

 
1
இந்த கோடையில் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் முழு கொள்ளளவில் கடந்த வார நிலவரப்படி 57 சதவீதம் மட்டுமே நீர் இருந்தது. பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.2 டிஎம்சியாக இருந்தது. தற்போது வீராணம் ஏரி வற்றிவிட்டது. தமிழகத்தில் கடலூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் வெயில் அதிகமாகவே வாட்டி எடுக்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சத்தை போக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்திற்கு ரூ 150 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பற்றாக்குறை மாவட்டங்களில குடிநீர் விநியோகத்திற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின்விநியோகம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.