ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் கண்டனம் - பாதியில் வெளியேறிய ஆளுநர்

 
tn

சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

stalin

நடப்பாண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் கூடிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை தொடங்கினார். அப்போது சமூகநீதி , சுயமரியாதை, திராவிட  மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65 ஆவது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்றுள்ளார்.  சமூக நீதி ,சுயமரியாதை ,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம் ,பெண்ணுரிமை, மத நல்லிணக்கம் , பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார் ,அண்ணல் அம்பேத்கர் ,பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும்,  கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல்  ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது என்ற பத்தியில் உள்ள தலைவர்களின் பெயர்களையும் அவர் முழுமையாக தவிர்த்து விட்டார்.

tn

இந்நிலையில்  தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை.தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட குறிப்பை, ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது. அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்து  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனங்களை பதிவு செய்தார்.  முதலமைச்சர் கண்டனத்தை தொடர்ந்து ஆளுநர் ரவி விறுவிறுவென அவையை விட்டு வெளியேறினார். அப்போது  தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க என திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள்  முழங்கினர். இதன் மூலம் முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோதே சட்டமன்ற நடவடிக்கைகள் முடிவதற்கு முன்பாகவே ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறினார்.