மாமன்னர் பூலித்தேவனின் 310-வது பிறந்தநாள் : கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம்..!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவரின் பிறந்தநாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது. தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர் மற்றும் அச்சமற்ற போர்வீரரான அவர் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, பாரத விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார்.
அவரது லட்சியங்கள், தியாகங்கள் மற்றும் மரபுகள், விடுதலை போராட்டத்துக்கு வலுவான அடித்தளமிட்ட இடைவிடாத போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தன. அவை நீடித்த வலிமையின் மூலாதாரமாகத் தொடர்ந்து வலுவான, மீள்தன்மை மற்றும் வளமான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது. தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர் மற்றும் அச்சமற்ற போர்வீரரான அவர் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, பாரத விடுதலைக்கான… pic.twitter.com/6NT3UaYzTa
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 1, 2025


