என்னை கருப்பு என்றும், பரட்டை என்றும் கிண்டல் செய்கிறார்கள் - தமிழிசை

 
Tamilisai

தன்னை ஒரு ஆளுநர் என்றும் பாராமல் கருப்பு என்றும், பரட்டை என்றும் கிண்டல் செய்கிறார்கள் என தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் இந்த விழாவில்,  கல்வியில் சிறந்து விளங்கி முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவிகள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- என்னை கருப்பு என்றும், பரட்டை என்றும் கிண்டல் செய்கிறார்கள். என்னை கருப்பு என்று சொன்னால் நெருப்பாய் மாறி உயர்ந்து கொண்டே இருப்பேன். என்னை பரட்டை என்று சொன்னால் பறந்து பறந்து உயர்ந்து போய்க் கொண்டே இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.