நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ். எல்.வி எஃப் -12 ராக்கெட் ..

 
 ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட்

வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி  ஜி.எஸ். எல்.வி எஃப் -12 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.   

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி உள்ளிட்ட பல்வேறு அரக ராக்கெட்டுகளை வடிவமைத்து விண்ணுக்கு அனுப்பி வருகிறது.  அந்தவகையில்  'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.  அதன்படி இந்த ராக்கெட்டானது வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை விண்ணில் பாய உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்குகிறது.  சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை நாளை காலை 10.42 மணிக்கு ஏவப்படுகிறது.  இது  2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோளை சுமந்து செல்கிறது.  இந்த செயற்கைகோள்  புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

மே 29ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்..

அத்துடன்  செயற்கைகோளை நிர்ணயிக்கப்பட்டுள்ள  சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.  ராக்கெட்டை விண்ணில் செலுத்த இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.21 மணிக்கு தொடங்கியது.  . 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.