வேளச்சேரி கல்லூரி மாணவர்கள் மோதல் - 9 பேர் கைது, 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!!

 
tn

சென்னை வேளச்சேரி குருநானக்  கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில்  9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tn

சென்னை கிண்டி வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள குருநானக் கல்லூரியில் மயிலாப்பூரில் சேர்ந்த தனுஷ் என்பவர் மூன்றாம் ஆண்டு பொருளாதார படித்து வந்துள்ளார்.  இவர் அதே கல்லூரியில் தாவரவியல் படிக்கும் மாணவர்களை கிண்டல் செய்ததாக தெரிகிறது.  இதன் காரணமாக தனுஷை  தாவரவியல் பிரிவு மாணவர்கள் தாக்கியுள்ளனர். . இதை தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு வந்த தனுஷ் தன்னை தாக்கிய தாவரவியல் பிரிவு மாணவர்களை நோக்கி இரண்டு பட்டாசுகளை வீசியதாக கூறப்படுகிறது.  இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

arrest

 இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டுப் பட்டாசை மோதலில் பயன்படுத்தியதாகவும், அங்கு கத்தியதும் கைப்பற்றப்படவில்லை என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு மாணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

tn

கைதான மாணவர்கள் உட்பட 18 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.  இது தொடர்பாக 12 மாணவர்கள் மீது கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மாணவர்கள் போலீஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.