வடமாநிலத்தவர்கள் அவர்களாக வரவில்லை...இங்கே உள்ளவர்கள் தான் கூட்டி வந்தனர் - எச்.ராஜா பேட்டி

 
h

வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே தமிழகத்திற்கு வரவில்லை எனவும், அவர்களை சிலர் ரயிலில் டிக்கெட் புக் பன்னி கூட்டி வந்தார்கள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். 

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தைவிட்டு வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர் கூறியதாவது: வடமாநில தொழிலாளர்கள் அவர்களாகவே வரவில்லை. இங்கே உள்ளவர்கள் தான் ரெயிலில் புக் பன்னி கூட்டி வந்தார்கள். ஆனால் சிலரோ, எங்களுக்கு ஓட்டு சேர்ப்பதற்காக இங்கே திரட்டி வருவதாக கூறுகின்றனர்.. 

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக உள்ளது என்று கூறுவதே பித்தலாட்டம். ஏனென்றால், 19 ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னனியினரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு படுகொலை நடக்கிறது. போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. நம் வேலைகளை தமிழர்கள் பார்ப்பதற்கு தயாராக இல்லாத சூழலில் இருக்கையில், அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும். 1969 காலகட்டத்தில் ஒரு தலைமுறையினருக்கு குடிப்பழக்கம் என்றால் என்னவென்பது தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் கள்ளுக்கடையை தொடங்கி தமிழர்களை குடிகாரர்களாக்கியது கருணாநிதி. அவரது மகன் ஸ்டாலினின் ஆட்சி மோசமான ஆட்சி. அவர்களின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது. இவ்வாறு கூறினார்.