நாளை முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை!!

 
school

தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியது. தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகால் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.

school

அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 -டிச. 22ம் தேதி வரையும், 6-10 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.11- டிச.21 ம் தேதி வரையும் நடைபெற்றது. பல பள்ளிகளில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைகின்றன.

school

இந்நிலையில் நாளை முதல் 9 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது. இதையடுத்து வருகிற ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.