தேவர் தங்கக் கவசம் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பு

 
ee

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தங்கக் கவசம் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கபட்டது‌. 

gg

இதுதொடர்பாக அதிமுக சமூகவலைத்தள பக்கத்தில், பசும்பொன்னில் அமைந்துள்ள ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அஇஅதிமுக-வின் சார்பில் மாண்புமிகு அம்மா அவர்களால் வழங்கப்பட்ட தங்கக் கவசம் அணிவிக்கப்படுவது கழகம் பெருமிதம்கொள்கின்ற வழக்கம்.

g

அக்டோபர் 30ல் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் சார்பில் இன்று கழக பொருளாளர் மற்றும் கழக மூத்த தலைவர்களால் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கபட்ட பசும்பொன்னிற்கு கொண்டு செல்லப்படுகிறது‌. 


கழகத்தின் சோதனையான காலம் காரணமாக கடந்த  இரண்டு ஆண்டுகளாக கழகத்தினரால் நேரடியாக கவசம் அணிவித்து மரியாதை செலுத்தமுடியாமலிருந்து, இன்று மீண்டும் அஇஅதிமுக உண்மையான தொண்டர்களால் அய்யாவின் நினைவிடம் சென்று ஒப்படைக்கப்பட்டு பசும்பொனார் புகழுக்கு புகழ் சேர்ந்ததில் பெருமிதம்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.