விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள் - ஜி.கே.வாசன்

 
gk vasan

விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

GK Vasan

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 23 ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் விவசாயிகளின் பங்களிப்பு தான் முதன்மையானவை, முக்கியமானவை.

நம் நாட்டில் உள்ள மக்களுக்கு உணவளிக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் விவசாயிகள் நாள்தோறும் மேற்கொள்ளும் பணிகள் மிகவும் இன்றியமையாதது. விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. 24 மணி நேரமும் நிலத்தில் வியர்வை சிந்த உழைத்து, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான தானியங்களை, காய்கறிகளை, பழங்களை அறுவடை கொடுப்பதால் தான் நாட்டு மக்களுக்கு உணவு கிடைக்கிறது. செய்து ஆனால் விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை கிடைப்பதில்லை. விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்களை விவசாயத்துறையில் வியவசாயப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

gk

குறிப்பாக உணவுப்பொருட்களை வீணாக்காமல் இருப்போம். விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்போம். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, விவசாயத் தொழிலை முன்னேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.