இவர் ஒரு வேடந்தாங்கல் பறவை.. அடிக்கடி கூட்டணியை மாற்றுவார் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

 
Q
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, வேடந்தாங்கல் பறவை போல அன்புமணி ராமதாஸ் அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிக் கொண்டிருப்பவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை
கூட்டணியை நம்பி எல்லாம் நாங்கள் கட்சி நடத்தவில்லை. கூட்டணி இல்லை என்றால் சொந்த பலத்தில் நிற்போம். இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டுவந்தது அதிமுக. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுவது இது முதல்முறை அல்ல. இதற்கு காரணம் திமுகதான். திமுக ஆட்சிக்கு வந்த இந்த 3 ஆண்டுகளில் கடுமயான ஊழல் நடந்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது.
பாஜவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுப்பதாகச் சொன்னவர் ராமதாஸ் . இப்போது அதே கட்சியின் கூட்டணியில் இணைந்து வெற்றி பெறபோவதாகச் சொல்கிறார். ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியில் இணைகிற கட்சிதான் பாமக என்றார்.