வெப்ப அலை: என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது ? பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
கோடைகாலத்தில் தமிழ்நாட்டு மக்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்
* அதிகாரபூர்வ வானிலை எச்சரிக்கைகள் மற்றும் TNAlert மொபைல் செயலி மூலம் தொடர்ந்து கவனிக்கவும்.
* வீடுகளில் திரைச்சீலைகள், சூரிய ஒளி மறைப்புகள், காற்றோட்டம் மற்றும் பிரதிபலிப்பான்களை பயன்படுத்தி உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருங்கள்.
* ORS, குடிநீர் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை சேமித்து வைக்கவும்.
* காலை அல்லது மாலை நேரங்களில் வெளிப்புற வேலை பயணம் மற்றும் பள்ளி நடவடிக்கைகளை திட்டமிடுங்கள்.
* வெளிர் நிற தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
* வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள். சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களின் நலனில் கவனம் செலுத்தவும்.
* செல்லபிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கு போதுமான நிழல் மற்றும் குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்யவும்.
* இலைகள், குப்பை அல்லது விவசாய கழிவுகளை எரிப்பதை தவிர்க்கவும்.
* வீடுகள், மொட்டைமாடிகள் மற்றும் தெருக்களை சுற்றி முடிந்தவரை செடிகள் மரங்கள் வளர்த்து பசுமை சூழல் நிறைந்த இடமாக பராமரிக்கவும்
வெப்ப அலையின் போது
* மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிவரை வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
* தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
* நீர்ச்சத்துடன் இருக்க ORS மோர் லஸ்ஸி, எலுமிச்சை சாறு அல்லது இளநீர் பயன்படுத்தவும்.
* திரவக் கட்டுப்பாடுள்ள உணவு முறையைப் பின்பற்றுபவர்கள். நீர்சத்துள்ள உணவினை அதிகரிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
* வெளியில் செல்லும் போது உங்கள் தலையை துணி. தொப்பி அல்லது குடையால் மறைத்துக் கொள்ளவும். சன்ஸ்கிரீன் மற்றும் சன்கிளாஸ்களை பயன்படுத்துங்கள்.
* வசிப்பிடத்தின் உட்புறத்தை நன்கு காற்றோட்டமாக வைத்திருங்கள். முடிந்தால் கீழ் தளங்களில் தங்கவும்.
* திறந்த வெளியில் வேலை செய்ய வேண்டியிருந்தால் அடிக்கடி இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.
* நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் குழந்தைகள் முதியோர்கள் அல்லது செல்லபிராணிகளை ஒருபோதும் விட்டுச்செல்லாதீர்கள்.
* கடுமையான பணிகள், நீண்ட நடைப்பயிற்சி அல்லது நேரடி சூரிய ஒளியில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.
* சூடான பரப்புகளில் வெறுங்காலுடன் நடப்பதை தவிர்க்கவும்.
* எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள். மது காஃபின் மற்றும் நீரழிப்பு ஏற்படுத்தும் பானங்களை தவிர்க்கவும்.
* உங்கள் அண்டை வீட்டார் மற்றும் வெளிப்புற வேலை செய்பவர்களின் நலனை கண்காணிக்கவும்.
* வெப்ப அலையின் போது பணியாளர் மற்றும் வெளிப்புற தொழிலாளர்களுக்கு சுத்தமான குடிநீர் நிழல் மற்றும் ஓய்வு இடைவெளி வழங்கப்பட வேண்டும்.
* பணியிடங்களில் ORS, மோர், முதலுதவி பெட்டி, ஐஸ் ஒத்தடப்பைகள் ஆகியவற்றை வைத்திருக்கவும்.
* வெப்பம் அதிகம் இல்லாத அதிகாலை அல்லது மாலையில் கடுமையான வேலைகளை திட்டமிடுங்கள்.
* அதிக வெப்பத்தின் போது தொழிலாளர்கள் அடிக்கடி ஓய்வு எடுக்க அனுமதிக்கவும்.
* புதிய தொழிலாளர்கள் வெப்பத்திற்கு பழக்கப்படும் வரை அவர்களுக்கு இலகுவான பணிகளை ஒதுக்குங்கள்.
* கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவ குறைபாடு உண்ணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
* வெப்ப அலை எச்சரிக்கைகளை தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவும்.
* வெப்ப அலையின் தாக்கத்தினை தணித்திட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பிரதிபலிப்பு கூரை பெயிண்ட் பயன்படுத்தவும் அல்லது குளிர் கூரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்.
* சன்னல் பிரதிபலிப்பான்களை நிறுவவும்
* சூரிய ஒளியைத் தடுக்க அடர் வண்ண திரைச்சீலைகள், கண்ணாடி அல்லது மூங்கில் திரைச்சீலைகளைப் பயன்படுத்தவும்.
* இரவில் வெப்பநிலை குறையும் போது உண்டாக்குங்கள். காற்றோட்டத்தினை வீட்டை இயற்கையாகவே குளிர்விக்க உட்புற தாவரங்கள் அல்லது கூரை தாவரங்களை வளர்க்கவும்.
* மின்சாரத்தைச் சேமிக்கவும், குளிர்சாதன வெப்பநிலையை 24 C டிகிரி அல்லது அதற்கு மேல் பராமரிக்கவும்.
* வெப்ப அலையின்போது கால்நடை மற்றும் விலங்குகளுக்கு கால்நடைகளை நிழலான இடங்களில் வைத்து குளிர்ந்த சுத்தமான தண்ணீரை வழங்குங்கள்
* காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவற்றை வேலை செய்ய வைக்காதீர்கள்.
* ஓலைக்கூரை மண்பூச்சு, வெப்ப தணிக்கும் வெள்ளை பெயிண்ட் மற்றும் நீர்தெளிப்பான் ஆகியவற்றை பயன்படுத்தி கால்நடை கொட்டகையினை குளிர்விக்கவும்.
* மின்விசிறிகள், அல்லது தண்ணீர் கால்நடை கொட்டகைகளில் தெளிப்பான்களை பயன்படுத்துங்கள்.
* அதிக வெப்பத்தின் போது விலங்குகளின் மீது தண்ணீர் தெளிக்கவும் அல்லது பாதுகாப்பான நீர்நிலைகளில் குளிர்விக்கவும்.
* பசுந்தீவனம் கனிம கலவைகள் மற்றும் உப்பு ஆகியவற்றை வழங்கவும். வெம்மை குறைந்த நேரங்களில் மேச்சலுக்கு அனுப்பவும்.
வெப்ப அலைக்கு பிறகு
* சாதாரன வெப்பநிலை திரும்பும் வரை திரவங்களை பருகுவதைத் தொடரவும்.
* நன்றாக ஓய்வெடுங்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு கடுமையான செயல்களை தவிர்க்கவும்.
* தனியாக வசிக்கும் வயதானவர்கள். வெளிப்புற வேலை செய்பவர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் நலனை சரிபார்க்கவும்.
* கால்நடைகளுக்கு வெப்ப அழுத்தத்தை பரிசாதித்து. அவற்றிற்கு முறையாக நீர்சத்து கிடைப்பதை உறுதி செய்யவும்.
* அறைகளில் வெப்பம் அதிகரிப்பதை தடுக்க உட்புற காற்றோட்டத்தை பராமரிக்கவும்.
* நீர்சத்துள்ள பொருள்களின் பயன்பாடு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான அரசாங்க ஆலோசனைகளைப் பின்பற்றவும்.
வெப்ப வாதாத்திற்கான முதலுதவி
* வெயிலால் பாதிக்கப்பட்ட நபரை நிழலான குளிர்ந்த இடத்திற்கு நகர்த்தவும்.
* தலை, கழுத்து மற்றும் உடலில் ஈரமான துணியினால் ஒத்தடம் கொடுக்கவும் அல்லது குளிர்ந்த நீரை ஊற்றவும்.
* பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவுடன் இருந்தால் ORS எலுமிச்சை தண்ணீர் அல்லது மோர் கொடுக்கவும்.
* மிக அதிக உடல் வெப்பநிலை, கடுமையான தலைவலி தலைச்சுற்றல். குழப்பம். மயக்கம் அல்லது சுயநினைவின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் ஆம்புலன்ஸை அழைக்கவும்.
* தாமதிக்காமல் அருகிலுள்ள சுகாதர மையத்திற்கு அழைத்து செல்லுங்கள்.


