சென்னையில் வெளுத்து வாங்கும் மழை - அடுத்த அரை மணி நேரத்திற்கு நீடிக்குமாம்!

 
heavy rain

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், இந்த மழை அடுத்த அரை மணி நேரம் முதல் 45 நிமிடம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தமிழகத்தில் இன்று  கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது அடுத்த அரை மணி நேரம் முதல் 45 நிமிடம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.