"வலுவடையும் காற்றழுத்தம்" - தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்!!

 
rain

குமரி கடல் மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல், பகுதிக்கு 48 மணி நேரத்தில், வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல்  மிக கனமழை பெய்ய கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை ,தென்காசி, இராமநாதபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழையும்,  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.

rain

நாளை டெல்டா மாவட்டங்கள் ,கடலூர் ,மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,   கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் , உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

rain

3ம் தேதி மதுரை ,தென்காசி ,திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி வட உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். அதேபோல் வருகின்ற 5ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று மற்றும் நாளை குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  அதேபோல் இன்று முதல் 3ம் தேதி வரை கேரளக் கடலோரப் பகுதிகள்,   லட்சத்தீவு , மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கேரளக் கடலோரப் பகுதிகள் , லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க மேற்கூறிய தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.