செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

 
rain

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. 

Rain

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாட்ஸ்அப் எண் - 9444272345, கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077, தொலைபேசி எண்கள் - 044 - 27427412, 27427414 என்ற எண்கள் மூலம் புகார்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.