மாவீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் : தலைவர்கள் அன்புமனி, விஜய் புகழாரம்..

 
Anbumani  - Vijay Anbumani  - Vijay

மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி , அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ்மாலை சூட்டியுள்ளனர். 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில், “மாவீரன் அழகு முத்துக்கோனின்  வீரத்தையும்,  தியாகத்தையும் போற்றுவோம். 

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று  கொண்டாடப்படும்  நிலையில்,  இந்திய விடுதலைக்காக அவர் நடத்திய  போர்களையும், அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்கிறேன்.  வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த  அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.

அழகு முத்துக்கோன்

இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது ஆகும். ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து விட்ட சூழலில், மன்னிப்புக் கேட்டு வரி செலுத்த ஒப்புக்கொண்டால், உயிரையும், நிலத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, பீரங்கியின் வாயில் வைத்து சுடப்படும் தண்டனையை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன் அவர்.  அவரின் வீரத்தையும்,  தியாகத்தையும் நாம் போற்றுவோம்.  அவரது  வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம்  கொண்டு செல்ல அரசு  நடவடிக்கை  எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.,  

Image

தவெக தலைவர் விஜய் : “வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகு முத்துக் கோன் அவர்கள், தாய் நிலத்தின் உரிமை காக்க, அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போரட்டக் களத்தில் தலைவணங்காமல் நடந்தோள்களுடன் தீவிரமாகப் போரிட்டவர். 

வரியும் செலுத்த முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீரவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி,  குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்களின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்.. ” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.