ஹிஜாப் அணிந்த அரபு ஆசிரியைக்கு இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு

 
ஹிஜாப்

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா சார்பில் இந்தி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

Hijab wearing Arabic teacher denied permission to write Hindi exam in Tiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 540 மாணவ, மாணவிகள் இந்த இந்தி தேர்வினை எழுதி வருகின்றனர். காலை 10 மணி முதல் 12:30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4:30 தேர்வு நேரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை திருவண்ணாமலை அடுத்த தனியார் பள்ளியில் அரபி ஆசிரியையாக பணிபுரியும் ஷபானா தேர்வு எழுத வந்துள்ளார்.

அனுமதி கடிதத்துடன் தேர்வு அறைக்குள் சென்ற ஷபானாவிற்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு பத்து நிமிடங்கள் தேர்வு எழுதிய ஷபானாவை தேர்வு அறை மேற்பார்வையாளர் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வை எழுதக்கூடாது என கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஷபானா ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று கூறியதின் அடிப்படையில் இருவருக்கும் தேர்வு அறையினுள்ளே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஷபானாவிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவென்றால் வெளியே சென்று விடுங்கள் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ஷபானா ஹிஜாப் இஸ்லாமியர்களின் ஓர் அங்கம் என்றும்,  ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்றும் கூறியுள்ளார். 

அஃப்


இதனை அறிந்த எஸ்டிபிஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர டிஎஸ்பி குணசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி நிர்வாகத்திடம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இறுதியில் மாணவியை மீண்டும் தேர்வு எழுத அனுமதித்த நிலையில் மாணவியின் மனநிலை சரியில்லாத  காரணத்தினால் தான் தேர்வு எழுதவில்லை என தேர்வு அறையை விட்டு வெளியே சென்றார்.