சென்னையில் டாஸ்மாக் கடைகளைக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு..

 
டாஸ்மாக்

சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  

டாஸ்மாக் கடைகளுக்கு பொதுவான விடுறை நாள் என்று ஒன்று கிடையாது.  காந்தி ஜெய்ந்தி, திருவள்ளுவர் தினம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்தவகையில்  வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக்

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்துவிதமான 'பார்'களும் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றையதினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ” என்று  அவர் கூறியுள்ளார்.