காஞ்சிபுரத்தில் 2 ஊராட்சி பள்ளிகளுக்கு விடுமுறை..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக, 2 ஊராட்சிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அடுத்த வளதோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அத்துடன் இந்த விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு ஆலையின் மற்றொரு உரிமையாளரான நரேந்திரனை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆகையால் பட்டாசு தொழிற்சாலை அமைந்திருந்த குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் பரபரப்பான சூழல் இருந்துவருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.