வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் அறை: இறையன்பு கடிதம்!!

 
iraianbu

வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் அறை வழங்க தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

govt

இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு தலைமைச் செயலாளர்கள் இறையன்பு எழுதிய கடிதத்தில் , பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும். வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் வாகன ஓட்டுநர்கள் வராண்டாவிலும்,  வாகனத்திலும் தூங்குகின்றனர். 

iraianbu

சரியான தூக்கம் இன்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் நிலையில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  தங்கும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தில் வாகன ஓட்டுனர்களுக்கு அறை வழங்க அறிவுறுத்த வேண்டும். ஓட்டுநர்கள் தங்கும் அரைக்கான  குறைந்த கட்டணத்தை வாகன பார்க்கிங் கட்டணத்துடன் சேர்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.