146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெயில்.. - வானிலை ஆய்வு மையம் ஷாக் ரிப்போர்ட்..

 
146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெயில்.. - வானிலை ஆய்வு மையம் ஷாக் ரிப்போர்ட்..

கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகளவு காணப்பட்டதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பிற்பாதியில் இருந்து  வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும்.  பின்னர் ஜூன் மாதம் பிற்பாதியில் இருந்து மெல்ல மெல்ல குறையத் தொடங்கும். இந்த கோடை வெயில்  தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இப்போது இருந்தே பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், பழரசம், குளிர்பானம் உள்ளிட்டவற்றை நாட தொடங்கிவிட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெயில் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.  ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் இப்போதே சதமடிக்கத் தொடங்கி விட்டது.  

146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெயில்.. - வானிலை ஆய்வு மையம் ஷாக் ரிப்போர்ட்..

இந்நிலையில் 1877ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிப்ரவரி மாதம் பதிவான வெப்பநிலை 29.54 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதுவே இதுவரை இருந்த பிப்ரவரி வெப்பநிலையில் அதிகபட்சமாகும்.” என்று குறிப்பிட்டுள்ளது.

1901க்குப் பிறகு 2006 பிப்ரவரியில் 29.31°C மற்றும் 2016 பிப்ரவரியில் 29.48°C பதிவானதே இதற்குமுன் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்திருக்கிறது.  இந்நிலையில் கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இதனையொட்டியே   இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெப்பம் அதிகமாக இருந்ததாக  வானிலை ஆய்வு மையம்  தெரிவித்திருக்கிறது.  நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.