ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?. - ஐகோர்ட்டில் ஒபிஎஸ் தரப்பு வாதம்..

 
அதிமுக

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு தற்போது வாதங்களை  முன்வைத்து வருகிறது.  

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும்,  பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும்  ஓபிஎஸ் ஆதரவாளார்    மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி குமரேஷ்பாபு விசாரித்து வருகிறார்.  இந்த வழக்கின் பரபரப்பு வாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.  அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் இல்லாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது, நியாயமற்றது. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த நிலையில் அந்த பதவிக்கு போட்டியிட விதிகள் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.   

ஒருங்கிணைப்பாளர் பதவி  காலாவதியாகிவிட்டதாகக் கூறுவதை எப்படி  ஏற்க முடியும்?. - ஐகோர்ட்டில் ஒபிஎஸ் தரப்பு வாதம்..

 பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது தன்னிச்சையானது, நியாயமற்றது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது.  

ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ம் ஆண்டு வரை நீடிக்கிறது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும்; அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..

ஜூலை 11-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது.  பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 1977 முதல் கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.” என்று  வாதிட்டனர்.

தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு வாதத்தை நிறைவு செய்த பின்னரே எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் தொடரும்.   இரு தரப்பு வாதங்களும் நாளை காலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னரே அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்படும்..