கணவனும் குழந்தைகளும் கதறல்! ஈவு இரக்கம் இல்லாமல் கள்ளக்காதலனுடன் சென்ற பெண்

 
n

கணவனும் குழந்தைகளும் கதறி நிற்க கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று அவருடன் அடம்பிடித்துச் சென்றிருக்கிறார் அந்தப் பெண்.   சேலம் மாவட்டத்தில் நடந்தது இந்த சம்பவம்.

 சேலம் மாவட்டத்தில் ஓமலூர் எடுத்து செம்மாண்டப்பட்டி.  அப்பகுதியைச் சேர்ந்தவர் சவுண்டப்பன்.   இவரது மனைவி லட்சுமி.   திருமணமாகி 10 ஆண்டுகளான இந்த தம்பதிக்கு 9 வயதில் ஆண் குழந்தையும்,  7 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.   

வீட்டிலேயே பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார் சவுண்டப்பன்.  இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஓமலூர் அடுத்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த தனபால் பட்டு நெசவு கூலி வேலை செய்து வந்திருக்கிறார்.  அவருக்கும் திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

o

 சவுண்டப்பன் வீட்டு அருகே  பட்டு நெசவு செய்யும் கூலி வேலை செய்து வந்த தனபாலுவும்  சவுண்டப்பன் மனைவி லட்சுமியும் அடிக்கடி சந்தித்து பேசி வந்திருக்கிறார்கள்.   இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் ஏற்காடு,  கொல்லிமலை,  மேட்டூர் ஆகிய இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள் . 

நிரந்தரமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இருவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.   அதன்படி தனது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு லட்சுமி தனபாலுடன் தலைமறைவாகி இருக்கிறார்.   இதனால் ஓமலூர் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்று புகார் அளித்திருக்கிறார்.

 புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமியை தேடி வந்துள்ளனர்.   ஒரு வாரத்திற்கு பின்னர் புதுச்சேரியில் ஹோட்டலில் அறை எடுத்து இந்த ஜோடி தங்கி இருந்தது தெரிய வந்திருக்கிறது.   அப்போது லட்சுமியை மீட்டு அவர்களை  ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் போலீசார் .

குழந்தைகளும் காவல் நிலையம் சென்று லட்சுமியைப் பார்த்து தங்களுடன் வீட்டுக்கு வருமாறு கதறி அழுது இருக்கிறார்கள்.   கணவனும் வேண்டாம் என்று தனபால் உடன் தான் செல்வேன் என்று பிடிவாதமாக சொல்லி இருக்கிறார்.  ஆனால் போலீசார் காதலனுடன் அனுப்ப மறுத்து லட்சுமியை தாயுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இன்னொரு புறம் தனபாலின் மனைவி தனது கணவனிடம் தகராறு செய்து தங்களுடன் வருமாறு சத்தம் போட்டு இருக்கிறார்.  

 இதை அடுத்து போலீசார் தனபாலை மனைவி குழந்தைகளுடன் அனுப்பி வைத்துள்ளனர்.   ஆனால் கடைசி வரைக்கும் கணவனும் வேண்டாம் குழந்தைகளும் வேண்டாம் என்று சொன்ன பெண்ணை பார்த்து கணவனும் குழந்தைகளும் கதறி அழுதிருக்கின்றனர்.