குடித்ததைத் தட்டிக் கேட்ட மனைவி; சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவன்!

 
murder

தரமணி அருகே மது குடிப்பதை தட்டிக் கேட்டதால் முதியவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணி மகாத்மா காந்தி நகரில் வசித்து வந்தவர் துரைசாமி(67). இவரது மனைவி வேம்பாள்(66). துரைசாமி மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது. இதன் காரணமாக அடிக்கடி இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் துரைசாமி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் வேம்பாள் மற்றும் துரைசாமிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த துரைசாமி கத்தியை எடுத்து வேம்பாளை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

dead

வேம்பாளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வேம்பாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தரமணி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து துரைசாமியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.