கணவன் உடலருகே அழுத மனைவி திடீர் நிசப்தம் - உலுக்கி பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி

 
வ்

 இறுதிக்காலம் வரை ஒன்றாகவே வாழ்ந்து வந்த கணவன்- மனைவி மரணத்திலும் பிரியாமல் ஒன்றாகவே அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த பாச தம்பதிகளின் சம்பவம்.   அம்மாவட்டத்தில் கீரிப்பாறை அடுத்த வெள்ளாந்தி கிராமம் உள்ளது.  இந்த மலை கிராமத்தை சேர்ந்தவர் செம்பொன் காணி.  90 வயதான செம்பொன் காணியின் மனைவி வள்ளியம்மாள்.  அவருக்கு 85 வயது.  இத்தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

 வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே அவதிப்பட்டு வந்திருக்கிறார் செம்பொன் காணி.  அவருக்கு சேவைகள் செய்து வந்திருக்கிறார் வள்ளியம்மாள்.  

ய்ட்ட்

இந்த நிலையில் நேற்று இரவு செம்பொன் காணி உயிரிழந்துவிட்டார்.  இதன் பின்னர் உறவினர்களுக்கு எல்லாம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து அடக்கம் செய்வதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.   கணவன் உடல் அருகிலேயே அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார் வள்ளியம்மாள்.   அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்திருக்கிறார் .   உறவினர்கள் அவரை தூக்கி பார்த்த போது அவரின் உயிர் பிரிந்திருந்தது தெரியவந்திருக்கிறது.

 முதுமையிலும் ஒன்றாகவே வாழ்ந்து வந்த இந்த தம்பதி மரணத்தில் கூட பிரிய விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்ட உறவினர்களும் ஊராரும் இருவரையும் ஒன்றாகவே அடக்கம் செய்துள்ளனர்.