“மதிமுகவில் இருந்து விலகுகிறேன்” - திருப்பூர் துரைசாமி அறிவிப்பு

 
tn

மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.

vaiko ttn

மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவை  முன்னிலைப்படுத்தி கட்சியை வழிநடத்துவதாக மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  இந்த சூழலில் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைத்து விடலாம் ; இனி கட்சி தேறாது என்று வைகோவிற்கு மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி சமீபத்தில் எழுதிய கடிதம் பரபரப்பு கிளப்பியது. ஆனால் இதைக் கண்டு கொள்ளாத வைகோ சிலவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்துகிறோம் என்று பதிலளித்திருந்தார்.

tn

இந்த சூழலில் மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.  திமுக உட்பட வேறு எந்த கட்சியிலும் இணைய மாட்டேன் என்றும் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்றும் திருப்பூர் துரைசாமி கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளது.